Blog

புகையிலையை ஒழிப்போம்… உடல்நலத்தை காப்போம்….

ஆண்டுதோறும் மே 31-ம் தேதி ‘சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புகையிலை உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், உலக சுகாதார அமைப்பு புகையிலை உபயோகத்தைக் குறைக்க பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.

புகையிலையால் நுரையீரல் புற்றுநோயால் உலகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இதன் பாதிப்பு பல மடங்காக பெருகி இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. உலகளவில் இந்நோய் பரவியிருந்தாலும் பாதிக்கப்பட்டோரில் 58% வளரும் நாடுகளில்தான் உள்ளனர்.

ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையம் உறையூர்,திருச்சி

தொடர்புக்கு : 737373 1008 / 737373 1007